துபை மாநகரில் தமிழ் இஸ்லாமிய இஸ்திமா..

மே 1, 2008
அல்லாஹ்வின் திருப்பெயரால்..

துபை மாநகரில் தமிழ் இஸ்லாமிய இஸ்திமா..

துபை மாநகரில் தமிழ் இஸ்லாமிய இஸ்திமா நிகழ்ச்சியானது, 25.4.2008 வெள்ளிக்கிழமை அஸர் முதல் இஷா வரை டேரா துபையில் உள்ள இந்தியன் இஸ்லாஹி சென்டரில் இனிதாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக சகோதரர். அமீர் சுல்தான் அவர்கள் கிராஆத் ஓதினார். அதனை தொடர்ந்து சகோதரர். ஷிப்காத்துல்லாஹ் அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் முதல் அமர்வின், சிறப்பு உரையினை சகோதரர். அப்துல் ஸலாம் மதனி (இயக்குனர் - அல் மனார் திருக்குர்ஆன் பயிற்சி மையம் - அல் கூஸ் - துபை) அவர்கள் நிகழ்த்தினார். அவரின் சிறப்பு உரையினை தொடர்ந்து தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள மெளலவி. நூருல் அமீன் அவர்கள் நிகழ்த்தினார்.

ம.ரிப் தொழுகை முடிந்தவுடன் இரண்டாவது அமர்வானது துவங்கியது. துபை இந்தியன் இஸ்லாஹி சென்டரில் பணியாற்றும் கேரளாவைச்சார்ந்த மெளலவி. ஷிஹாப் எடக்கர அவர்கள் உரை நிகழ்த்தும் போது, சத்திய மார்க்கத்தினை எடுத்துரைக்கும் பணியினை துபாயில் இருக்கும் அனைத்து மாநில இஸ்லாமிய சகோதரர்களும் தத்தம் பணியினை திறம் பட செய்ய வேண்டும். இந்த பணியில் ஏற்படும் சிரமங்களையும், கஷ்டங்களையும் பொறுத்துக்கொண்டு நாம் மேற்கொண்ட பணியில் தொய்வு இல்லாமல் செய்தால் மறுமையில் அல்லாஹ்விடத்தில் நமக்கு கூலி கிடைக்கும் என்பது போன்ற பல கருத்துக்களை, தமிழ் பேசக்கூடிய சகோதரர் புரிந்துக்கொள்ளும் விதத்தில் மலையாளம் கலந்த தமிழில் எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சி முடிந்து வெளியே சென்ற அனைத்து சகோதரர்களின் உள்ளங்களிலும் ஒரு மாற்றத்தினை அல்லாஹ் நாடினால் ஏற்படுத்தக்கூடிய அளவில் இருந்தது அவருடைய உரைகள் கற்கள். அதனை தொடர்ந்து சகோதரர். நாஸர் அலி கான் அவர்கள் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் ஏகத்துவ கொள்கையில் பற்றுள்ள அனைத்து சகோதர உள்ளங்களும் எந்த விதமான கருத்து பரிமாற்றங்களும் இல்லாமல் கலந்துக்கொண்டதினை காணும் போது, இஸ்லாமிய சகோதரர்களிடையே ஒற்றுமையானது ஏற்படும் என்பது திண்ணம். அல்லாஹ்வின் திருப்பொருத்ததை நாடி நடை பெற்ற இந்த நிகழ்ச்சியினை இந்தியன் இஸ்லாஹி சென்டர் – தமிழ் பிரிவு – துபை மிகச் சிறப்பாக செய்து இருந்தது. தமி்ழ் இஸ்லாமிய நி்கழ்ச்சியினை கேட்பதற்கு கேரளாவை சார்ந்த பல சகோதரர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

தகவல் : அபூ ஆஃப்ரின


குவைத் ”தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சி”

ஏப்ரல் 23, 2008

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

 

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சிமற்றும் குவைத் மீலாது (ஹிஜ்ரி 1429) மாநாடு ஒலி / ஒளிப்பேழைகள் வெளியீடு

 

                பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம…

           

            இன்ஷா அல்லாஹ் வருகின்ற 24-04-2008 வியாழக்கிழமை மாலை 6:30 மணி இரவு 9:30 மணி வரை குவைத், சுர்ரா பகுதியில் உள்ள சங்கத்தின் துணைச்செயலாளர் அல்ஹாஜ் எம். முனீர் அஹ்மத் அவர்களின் இல்லத்தில் (கத்ஆ : 3, ஷாரா : 6, வீட்டு எண் : 23, தொலைபேசி : 6633054) குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-tic) ஏற்பாடு செய்யும் தமிழ் முஸ்லிம் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சிமற்றும் குவைத் மீலாது (ஹிஜ்ரி 1429) மாநாடு ஒலி / ஒளிப்பேழைகள் வெளியீடுநிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.

            சங்கத்தின் தலைவர் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைக் அப்துல் லத்தீஃப் காஸிமி ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் சங்கத்தின் உலமாக்கள் குழு உறுப்பினர் மவ்லவீ காரீ அஷ்ஷைக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ ஹழ்ரத் அவர்களும், சங்கத்தின் தலைமை நிலைய சொற்பொழிவாளர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அஷ்ஷைக் ஏ. முஹம்மது அலீ ரஷாதி ஹழ்ரத் அவர்களும், சங்கத்தின் துணைச்செயலாளர் அல்ஹாஜ் எம். முனீர் அஹ்மத் M.A., அவர்களும் சிறப்புரையாற்றுகின்றனர்.

            சங்கம் ஆரம்பிக்கப்பட்டதின் நோக்கம், அதன் செயற்பாடுகள், கடந்து வந்த பாதை, எதிர்கால திட்டங்கள் போன்றவற்றை சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., அவர்கள் எடுத்துரைக்கின்றார்.

            கடந்த மார்ச் (200 8) மாதம் சங்கம் செய்த மாபெரும் ஸீறத்(மீலா)துன் நபி சிறப்பு மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து வருகை தந்த சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் மஜ்லிஸ் மதாரிஸுல் அரபிய்யா என்ற தமிழக அரபிக்கல்லூரிகளின் கூட்டமைப்பின் தலைவர், நீடுர் நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக்கல்லூரியின் முனனாள் முதல்வர், சென்னை மந்தைவெளி பெரிய பள்ளிவாசலின் முன்னாள் தலைமை இமாம், வீரசோழன் கைராத்துல் இஸ்லாம் அரபிக்கல்லூரியின் இன்னாள் முதல்வர், நாடறிந்த நாவலர், எழுத்தாளர், நூலாசிரியர் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைக் ஓ.எம். அப்துல் காதிர் பாகவீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் மீலாது மற்றும் குவைத் நாட்டின் பல பகுதிகளில் நிகழ்த்திய தொடர் சொற்பொழிவுகளின் அடங்கிய ஒலி / ஒளிப்பேழைகள் இந்நிகழ்ச்சியில் வெளியிடப்படவுள்ளன.   

            இச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் குவைத் வாழ் இந்திய, இலங்கையைச் சார்ந்த தமிழ் இஸ்லாமியர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று பயனடையுமாறும், பெண்களுக்கு தனியிட வசதியும், விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளதாகவும் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

            மேலதிக செய்திகளுக்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.K-Tic.com என்ற இணையதளத்தை பார்வையி டுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http: //groups.yahoo.com/group/K-Tic-group  என்ற யாஹு குழுமத்தின் தங்களை இணைத்துக் கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு அழைப்பு விடுக்கின்றது. நன்றி. வஸ்ஸலாம்.                                  

 

செய்தி :    

தகவல் தொடர்பு பிரிவு,

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)

இணையதளம்         : www.K-Tic.com

மின்னஞ்சல்                         : q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com

யாஹூ குழுமம்   : http://groups.yahoo.com/group/K-Tic-group

 

குறிப்பு :

இந்தச் செய்தியை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்… குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

நன்றி: Kuwait Tamil Islamic Committee


குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

ஏப்ரல் 3, 2008

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML) ஏற்பாடு செய்யும் காயிதே மில்லத்தின் கருத்துரைகள்நூல் வெளியீட்டு விழா!

                இன்ஷா அல்லாஹ் வருகின்ற 03-04-2008 வியாழக்கிழமை மாலை 7.00 மணியளவில் குவைத், அப்பாஸிய்யா பகுதியில் உள்ள இந்தியன் சென்ட்ரல் ஸ்கூல், காயிதே மில்லத் (ரஹ்) அரங்கத்தில் குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML) ஏற்பாடு செய்யும் (குவைத் இ.யூ.மு.லீக்கின் அமைப்பாளர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா அவர்கள் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் (ரஹ்) அவர்களின் கருத்தாழமிக்க நாடாளுமன்ற, சட்டமன்ற உரைகள் மற்றும் பத்திரிகை நேர்காணல்களை மிகவும் சுவையாக தொகுத்து எழுதிய) கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள்நூல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கின்றது.

            குவைத் கேரளா முஸ்லிம் கலாச்சாரப் பேரவை (KKMCC) நடத்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 60வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக நிகழும் இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு குவைத் கேரளா முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் தலைவர் ஆலி ஜனாப் கொரட்ரபுரம் முஹம்மது ரஃபீக் அவர்கள் தலைமை தாங்குகின்றார்.

            குவைத் இ.யூ.மு.லீக்கின் செயலாளர்கள் மவ்லவீ ஏ. அப்துஸ் ஸலாம் தாவூதி, சத்திரமனை ஏ. ஹஸன் முஹம்மது, பொருளாளர் ஷாஹின் ஷா, தலைமை நிலையச் செயலாளர் கலீலுர் ரஹ்மான், மற்றும் முன்னாள் பொதுச் செயலாளர் சமுதாயக் கவிஞர் எழுச்சிப் பாவலர் விழுப்புரம் ஷாஜி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

            குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க(K-Tic)த்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ அவர்கள் நூல் குறித்த அறிமுகவுறையாற்றுவதுடன் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகின்றார்.

            கேரளா இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் பானக்காடு சைய்யத் முஹம்மது அலி ஷிஹாப் தங்கள் அவர்கள் இந்நூலை வெளியிட, குவைத் லக்கி அச்சக அதிபர் சுலைமான் பாட்சா, குவைத் சுப்ரீம் கார்கோ அதிபர் முஹம்மது சித்தீக், குவைத் கோல்டன் அல்மாஸ் உணவக அதிபர் முஹம்மது முஸ்தஃபா, குவைத் இ.யூ.மு.லீக்கின் தலைவர் முஹம்மது ஃபாரூக் மற்றும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவீ முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவி ஆகியோர் நூலை பெற்றுக் கொள்வர்.

            அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளரும், இந்திய அரசின் வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான இ. அஹ்மத் அவர்களும், கேரள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளரும், கேரள அரசின் முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான பி.கே. குஞ்சாலி குட்டி அவர்களும் வாழ்த்துரை வழங்க இருக்கின்றனர்.

            நூலின் தொகுப்பாசிரியர் குவைத் இ.யூ.மு.லீக்கின் அமைப்பாளர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா அவர்கள் ஏற்புரையாற்றுவதுடன் இவ்விழா இனிதே நிறைவுபெறும். இவ்விழாவில் மேதகு குவைத் இந்திய தூதர் எம். கணபதி, கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி. கார்த்திகேயன், தோமஸ் சாண்டி, கேரள முன்னாள் அமைச்சர் சேர்குளம் அப்துல்லாஹ் மற்றும் குவைத், இந்திய அரசு அதிகாரிகளும், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். 

            இச்சிறப்பு மிகு விழாவில் குவைத் வாழ் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கர்கள், ஆர்வலர்கள், அனுதாபிகள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று பயனடையுமாறு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML) நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

            குவைத் இ.யூ.மு.லீக்கின் அதிகாரப்பூர்வ வலைப்பூவான www.kuwaitiuml.blogspot.comலும் நிகழ்ச்சி குறித்த செய்திகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், மேலதிக விபரங்களுக்கு iumlkuwait@yahoo.com / iumlkuwait@gmail.com என்ற மின்னஞ்சல்கள் வாயிலாகவோ, 6490687, 7841399, 6016737, 7549025, 7862316 போன்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளும்படியும் லீக் செய்தி அறிக்கை தெரிவிக்கின்றது.             

செய்தி :    

குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML)

வலைப்பூ: www.kuwaitiuml.blogspot.com

மின்னஞ்சல்கள் : iumlkuwait@yahoo.com / iumlkuwait@gmail.com


குர்ஆன் வசனங்கள் செல்போன் ரிங்டோன்

மார்ச் 26, 2008

FATWA

Saudi council of Muftis have given an unanimous Fatwa that ring tones on QURAN AAYAT are haraam because the AAYAT are not complete when we pick the phone and meanings of AAYAT changes when they are not complete. QURAN is for Hidayat and not for ring tones,
Please inform others
 

KINDLY PASS THIS MESSAGE TO OTHER MUSLIM BROTHERS AND SISTERS AS WELL AS FRIENDS
 
 
BE ADVISED

Don’t say ‘Mosque’ Say always ‘ Masjid
Because Islam organization has found that’s mosque = mosquitoes

Don’t write ‘ Mecca
Write always correctly ‘
Makkah
Because  Mecca = house of wines

Don’t write Mohd
Write always completely as ‘
Muhammad
Becasue  Mohd = the dog with big mouth.

Forward it as many Muslims as you can for Sawaab.
Nothing bad will happen if you dont forward this but these points are
impotant and it is our duty to educate our brothers and sisters.

Thanks & regards

Your brother in Islam

—————————

Thanks: K.Mohamed Ameen


BOYCOTT DENMARK PRODUCTS

மார்ச் 26, 2008

நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவமதித்த டென்மார்க் அரசைக் கண்டித்து நமது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக டென்மார்க் நாட்டின் அனைத்து பொருட்களையும் புறக்கனிப்போம்.

ஒவ்வொரு முஸ்லிமும் புறக்கனிக்க வேண்டிய டென்மார்க் பொருட்களின் விபரங்களைக் கண்டறிய கீழ்க்கானும் சுட்டியை சொடுக்குங்கள்

http://masdooka.googlepages.com/BOYCOTTDENMARK_.pps


ரியாத் மாநகரில் டாக்டர் ஜாகிர் நாயக்

மார்ச் 4, 2008

இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 06-03-2008 வியாழக் கிழமை அன்று மாலை 8 மணி முதல் 11 மணிவரை சவூதி அரேபியத் தலைநகர் ரியாத் மாநகரில் ‘மன்னர் பஹத் கலாச்சார மையத்தில் இஸ்லாமிய அறிஞர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் உரையாற்றுகிறார். நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சியும் உண்டு. அனைத்து சமயத்தவருக்குமான இப் பொது நிகழ்ச்சிக்கு முஸ்லிம் அன்பர்கள் தங்கள் பிற சமய நண்பர்கள் அனைவரையும் அழைத்து வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


இஸ்லாமியக் கருத்தரங்கு

மார்ச் 1, 2008

அஃதோர் அரிய இஸ்லாமிய கருத்தரங்கு. என்ன காரணத்தாலோ பரவலான அழைப்போ விரிவான விளம்பரமோ இல்லாமல் குறிப்பிட்ட சிலரை மட்டும் அழைத்திருந்தார்கள். வளர்தொழில் முனைஞனும், என்னினிய தோழனுமான தவ்ஹீத் மூலமாகவே என் காதுக்கும் அச்செய்தி வந்ததது.

சிதம்பரத்தில் நாளைக்கு ஒரு சிறப்பு கருத்தரங்கு இருக்கு… இதைப் பார்என்றவன் அழைப்பிதழை நீட்டியது முந்தையநாளான வியாழன் மாலை. கட்டாயம் கலந்து கொள்வது என்று அக்கணமே தீர்மானித்தேன்.

நட்பிற்கினிய இளவல்களான எம்.ஜீ. பஃக்ருத்தீன், லி. ஹமீது, நூருல் ஹசன் ஆகியோரிடம் தெரிவித்த போது, அவர்களும் வருவதாகச் சொன்னார்கள்.

ஜமாஅத் சார்பாக வேன் போகுது, அதுல போயிடலாம்என்ற தவ்ஹீதின் விளிப்பை நிராகரிக்க, அவனுடைய அடுத்த வார்த்தைகளே காரணமாகின ஆனா லேட்டாத்தான் கௌம்புவோம்  - பஞ்சாயத்து மன்ற கூட்டம் இருந்ததுதான் தாமததிற்கு காரணமாம்.

குறிப்பிட்ட திருமண மண்டபத்துக்கு இரண்டு மணிநேரம் தாமதமாக, இரவு சுமார் ஏழு மணிக்குத்தான் நாங்களே சென்றோம். ஆனால் கூட்டமே அப்போதுதான் தொடங்கப்பட்டிருந்தது. முதலில் அனைவருக்கும் சுவையான ஒரு காலிஃப்ளவர் சூப் கிடைத்தது.

இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் முயற்சியாலும், முனைப்பாலும் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில் கழகத்தின் தலைவர் கேப்டன் அமீர் அலியும் செயலாளர் இதயதுல்லாவும் விரிவுரை நிகழ்த்த சிறப்புரையாக கவிக்கோ. அப்துல் ரகுமான்.

முஸ்லிம் சமுதாயத்துக்கு கிடைத்த 3.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை முழுமையாகப்  பயன்படுத்திக் கொள்வதைப்பற்றியும், முஸ்லிம்கள் நிச்சயமாய் அறியவேண்டிய- பயன்பெறவேண்டிய பல்வேறு அரசுத்திட்டங்களைப் பற்றியும் ஒரு விழிப்புணர்வு கருத்தரங்கம் அது.

கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த சிதம்பரம் அன்சாரி அவர்களும் தொகுப்பாளாராக பணியாற்றிய லால்பேட்டை தளபதி ஷபீகுர்ரஹ்மான் அவர்களும் தம் பணியை சிறப்பாக ஆற்றினர்.பரங்கிப்பேட்டை பேரூராட்சி மற்றும் ஜமாஅத்தின் தலைவர். ஹாஜி.யூனூஸ்நானா அவர்களும் ஒரு சிறிய வாழ்த்துரை வழங்கினார்.

இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைவர் கேப்டன் அமீர் அலி மத்திய மாநில அரசுகளின் பல்வகைத்திட்டங்களைப் பட்டியலிட்டார்.

மதரசா (கல்விக்கூடம்) நடத்த முன் வருபவர்களுக்கு ஆறு ஆசிரியர்களுக்கான சம்பளத்தை (சுமார் ரூ 6000 - 12000) மத்திய அரசு மானியந் தருவதாகவும், சுதந்திர தினத்துக்கும், குடியரசு தினத்துக்கும் மத்திய அரசு விழா கொண்டாட நிதி உதவுவதாகவும், மேலும் பலப்பல திட்டங்களையும் பட்டியலிட்டார். அவற்றுள் குறிக்கத்தக்கனவாக முதியோர் ஓய்வூதியம், கர்ப்பிணி நலநிதி, மாணவர் உதவித் தொகை, வெளிநாட்டு வேலைத் தேடுவோருக்கான இலவசப்பயிற்சிகள் என ஒவ்வொன்றையும் சொல்லச் சொல்ல, விழிகள் விரிந்தன வியப்பில்.

சச்சார் கமிட்டியின் அறிக்கையில் எடுத்துரைக்கப்பட்ட உண்மைகளை உள்ளந்தொடுகிற வகையில் விளக்கிய கேப்டன் அமீர் அலியும், இதயத்துல்லாவும் சமூகத்தில் திறனுள்ளவர்களும், அறிஞர்களும் திறனற்றவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் உதவியாக வேண்டியதின் தேவையை மிகவும் வலியுறுத்தினர். இதயதுல்லாவின் உருக்கமான பேச்சில் நல்ல ஆன்மிக மணம். “நற்காரியத்துக்கு தூண்டுதலா யார் இருக்காங்களோ, அவங்களுக்கும் அந்த நற்காரியம் செய்த புண்ணியம் கிடைக்கும்”என்பதை மிகவும் வலியுறுத்தினார்.

எதிர்பார்க்கப்பட்ட கவிக்கோ தன் பேச்சில் மனித நேயத்தை மிகவும் வலியுறுத்தினார். இறைவன் ஒருவனே என்பதை நம்புகிறவர் அனைத்து மனிதர்களிடத்தும் சகோதரத்துவம் பேண வேண்டும் என்றார். ‘ஏகத்துவத்தின் செயல் விளக்கம் அது’.

குர்ஆனுடைய அல்மாவூன் அத்தியாத்திற்கு சிறு விளக்கம் அளித்தவாறு தன்பேச்சை தொடங்கிய கவிக்கோவிடம் சற்றேவேகம் குறைந்திருந்தது போல் எனக்கொரு பிரமை (?).

சச்சார் கமிட்டி அறிக்கையின் ஒரு வரி சாரம்சமாக “ 84 சதவீத முஸ்லிம்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள்” என்றார். “இதுல தான்யா நாம் மெஜாரிட்டி”.

கிரேக்க மூளை, சீன கைகள், அரேபிய நாவு - இம் மூன்றும் தான் இறைவனின் உன்னத படைப்புகள் என்ற அரேபிய பழமொழியை நினைவு கூர்ந்த கவிக்கோ, மற்ற சமூகங்களையும், நாடுகளையும் எடுத்துக்காட்டி ஒப்பீட்டளவில் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கி இருப்பதை; அவ்வாறு இருப்பதற்கான காரணத்தைக்கூட அறியாமலிருப்பதை ஆதங்கத்துடன் பகிர்ந்துகொண்டார். “கல்வியின்மைக்கு காரணம் வறுமை, வறுமைக்கோ கல்வியின்மை காரணம் என்றாகிவிடுகிறது.  “இன்னும் 20 ஆண்டுகளில் நடக்க உள்ள முன்னேற்றப் புரட்சியிலும் இந்த சமூகம் விழித்துக் கொள்ளாவிட்டால் நாசமாகிவிடும் என்றார். நாசமாகிவிடும்என்று அடிக்கடி சொன்னதை தவிர்த்திருக்கலாமே?! என்று தோன்றாமலில்லை.

அரசின் நலத்திட்டங்களை பள்ளிவாசல்களின் அறிவிப்புப் பலகையில் எழுதி வைக்கும்படியும் கேட்டுக்கொண்டார். “மவுத்(மரணத்)தை எழுதிப்போடறீங்களில்லையா, நான் ஹயாத்தை(வாழ்க்கையை)யும் எழுதிப்போடச் சொல்றேன்”.

கூட்டம் முடிந்தவுடன், எங்களூர் கல்விக்குழு சார்பாக லி. ஹமீதுடன், இதயத்துல்லா அவர்களிடம் அளவளாவியதில், நலத்திட்டங்களுக்கான படிவங்கள் பலவற்றையும் ஹாஜி மவுல்வி சாப்என்று அன்பாக அழைக்கப்படுகிற எங்களூர் அப்துல் காதிர் உமரியிடம் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். எந்த நலத்திட்ட உதவிக்கும் தயங்காமல் தம்மை அணுகலாம் என்றார்.

பின்னர் சுவையான சிற்றுண்டி வழங்கப்பட்டது. உணவருந்தியபின் எங்களூர் ஜமாஅத் நிர்வாகிகள் வந்த வேனிலேயே ஊர் திரும்பினோம்.

“நம்ம ஊர்லயும் இதுபோல ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணனும்”- தவ்ஹீத்.

“நமக்குள்ளே ஒரு குழு அமைத்து, நலத்திட்டங்கள் யாவும் ஏழைகளுக்கு சென்று சேர முயற்சிகள் மேற் கொள்ள வேண்டும்” என்றேன்.

சி. டபிள்யூ. ஓ. (கிரசண்ட் வெல்ஃபேர் ஆர்கனைசேஷன்) செஞ்சுக்கிட்டிருந்தாக, அவங்களையே தொடரச் சொல்வோம்என்றார் ஹமீது.

H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953
www.ezuthovian. blogspot. com


டாக்டர் ஜாகிர் நாயக் இன்று குவைத்தில்

பெப்ரவரி 28, 2008

DR. ZAKIR NAIK TO ADDRESS IN KUWAIT

 

[IPCINVITATION.jpg]

Dr.Zakir Naik, world famous international orator on Islam and Comparative Religion will arrive in Kuwait on 28th February, 2008 on a lecture tour as a guest of Ministry of Awqaf and Islamic Affairs.

He will deliver a Public Lecture on Friday 29th February 2008, 6:30 p.m. on the topic â€کConcept of God in Major Religions’ at Touristic Park Abbasiya, Opposite Indian Central School. Public lecture is arranged jointly by Indian Muslim Association (IMA) and Kerala Islamic Group (KIG) in coordination with Ministry of Awqaf and Islamic Affairs and Islam Presentation Committee.

Organizers have extended open invitation to all to participate in this lecture with their families and friends. Thousands of people from different faiths and nationalities are expected to participate in this public lecture.Dr. Zakir Naik is the President of the Mumbai based Islamic Research Foundation (IRF) calls on the people to practice the essence of religion in their life and stand for spreading the ideas of peace and justice in the society. IRF owns a website www.irf.net. Dr. Zakir Naik is also managing a 24 hour Islamic Spiritual Edutainment International Satellite TV Channel which now can be received in more than 125 countries in Asia, Middle East, Europe, Africa and Australia. Shortly it would be telecasted to the rest of the world too (www.peacetv. in).A medical doctor by professional training, Dr. Zakir Naik clarifies Islamic viewpoints and clears misconceptions about Islam, using the Qur an, authentic Hadith and other religious Scriptures as a basis, in conjunction with reason, logic and scientific facts. He is popular for his critical analysis and convincing answers to challenging questions posed by audiences after his public talks.

Dr. Zakir Naik has delivered more than 600 public talks in the U.S.A. , Canada , U.K. , Saudi Arabia , U.A.E., Kuwait , Qatar , Bahrain , Oman , South Africa , Mauritius , Australia , Malaysia , Singapore , Hongkong , Thailand , Guyana (South America) and many other countries, in addition to numerous public talks in India .He has successfully participated in several symposia and dialogues with prominent personalities of other faiths. His public dialogue with Dr. William Campbell (of USA), on the topic, “The Qur’an and the Bible in the light of Scienceâ€‌ held in city of Chicago, U.S.A., was a resounding success.


Dr. Zakir Naik appears regularly on many international T.V. Channels in more than 100 countries of the world. He is regularly invited for T.V. and Radio interviews. More than a hundred of his talks, dialogues, debates and symposia are available on video cassettes, video CDs and audio cassettes. He has authored several books on Islam and Comparative Religion.

 
With Bundle of Love,
Sulthan.

ஸபர் மாதம் பீடை மாதமா?

பெப்ரவரி 21, 2008

மனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ கிடையாது. அல்லாஹ்வோ, நபி(ஸல்) அவர்களோ அப்படி குறிப்பிடாதபொழுது ஒரு குறிப்பிட்ட மாதத்தை மட்டும் எந்தவித ஆதாரமுமின்றி அதாவது ஸபர் மாதத்தை பீடை மாதம் என்று எண்ணிக்கொண்டு அந்த மாதம் முழுவதும் திருமணம் போன்ற காரியங்களை செய்யாமல் இருப்பது கலாகதிரின் மீது நம்பிக்கையின்மையும், மூடநம்பிக்கையுமாகத் திகழ்கிறது முஸ்லிம்களிடம் குறிப்பாக தமிழக முஸ்லிம்களில் பல பகுதிகளில்.
அறியாமை காலத்து அரபியர்களின் வழக்கம் போன்று இஸ்லாம் அனுமதித்திருக்கின்ற திருமணம் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை நடத்தாமலும் மற்றவர்களையும் நடத்தவிடாமல் தடுப்பதற்கும் இவர்களுக்கு யார் உரிமை வழங்கினார்கள்?

அப்படி அந்த நாள், அந்த மாதம் பீடை மாதம் என்றிருக்குமேயானால் யாருக்கும் எந்த நலனும் நடைபெறாமல் இருக்க வேண்டுமே? அப்படி இருப்பதில்லை! திருமணம் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை நடத்தாது நிறுத்தும் அந்த முஸ்லிம்களின் குடும்பத்தில் குறிப்பிட்ட அந்த மாதத்தில் குழந்தை பிறப்பை தடுத்து நிறுத்த முடியுமா? அல்லது தள்ளித்தான் போட முடியுமா? அப்படியே பிறந்து விட்டால் அந்த குழந்தை பீடை மாதத்தில் பிறந்துள்ளது என்பதற்காக நிராகரித்து விடுவார்களா? அல்லது ஓரந்தான் கட்டுவார்களா?

இந்த சந்தர்ப்பத்தில் வெளிநாடு செல்வதற்கு விசா வந்துவிட்டால், விசாவை நிராகரிப்பார்களா? அல்லது வெளிநாடு செல்வதையே நிராகரிப்பார்களா? இப்படி செய்ய துணிவு இல்லாத இவர்களும் இவர்களை சுற்றியுள்ளவர்களும் மற்ற நிகழ்ச்சிகளை நடத்தவிடாமல் தடுப்பதற்கு எந்தவித ஆதாரமும் குர்ஆன்-ஹதீஸில் இல்லை என்பதை நடு நிலையோடு சிந்தித்துப் பார்த்தால் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மூடநம்பிக்கையே என்பது தெரியும்.

இவர்களின் கருத்துப்படி ஸபர் மாதம் ஒரு பீடை மாதம் என்று வைத்துக் கொண்டால்(?) எல்லோருக்கும் கேடுகள் வரும் நாளாக இருக்க வேண்டும், அதே போன்று நல்ல நாள் என்று ஒன்று இருக்குமேயானால் அந்த நாள் உலகத்தில் இருக்கக்கூடிய அனைவருக்கும் நன்மையானதாகவே இருக்கவேண்டும். எந்தவொரு நாளாக இருந்தாலும் அவற்றில் நல்லவைகளும், கெட்டவைகளும் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கின்றது. உலகிலுள்ள அனைவருக்கும் நல்லது நடக்கும் நாளாகவோ அல்லது எல்லோருக்கும் தீயவை நடக்கும் நாளாகவோ யாரும் ஒரு நாளைக் காட்ட முடியாது. இந்த அடிப்படை யதார்த்த உண்மையைக்கூட அறிந்து செயல்பட முடியாமல் பிற்காலத்தில் ஏற்பட்ட செயல்களின் காரணமாக மூளைச் சலவை செய்யப்பட்டு சுயமாக சிந்தித்து நல்லது, கெட்டது எது என பிரித்தறிய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை நினைக்கும்பொழுது மார்க்க பிடிப்பற்ற அறிஞர்கள் உண்மையான இஸ்லாத்தினை எடுத்து சொல்லாததும், தூய இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டாத முஸ்லிம்களும் ஆவர் என்று அறிய முடிகிறது.

பீடை நாட்கள் என்றோ மாதமென்றோ ஒதுக்கி தள்ளிவிட்டு ஸபர் மாதமல்லாத மற்ற நாட்களில், மாதங்களில் நல்ல நாட்கள் என தாங்களாகவே தீர்மானித்து செய்யப்படுகின்ற பல நிகழ்ச்சிகளில் தோல்வி மற்றும் நஷ்டம் ஏற்படுவது இல்லையா? விவாகரத்து பெறுவதும், குழந்தை பாக்கியமில்லாமல் இருப்பதும், தொழில் துறையில் நஷ்டமடைவதும், செல்வ நிலையிலுள்ளவர்கள் வறுமை நிலையை அடைவதும், பலவகை இயற்கையின் சீற்றத்தால் விவசாய பொருட்கள் அழிந்து போவதும் எதனால்? பீடை ஸபர் அல்லாத மற்ற மாதங்களில் செய்யப்படுகின்ற அனைத்து செயல்களிலும், நிகழ்ச்சிகளிலும் வெற்றி பெற வேண்டும் அல்லவா? அப்படி வெற்றியை மாத்திரம் அடைந்தவர்கள் இருந்திருக்கிறார்கள் என்றால் இல்லவே இல்லையே!.

ஆக யதார்த்த வாழ்க்கையில் ஒருவர் சந்தோஷப்படுவது மற்றொருவர் துக்கப்படுவதென்பது நாள்தோறும் நிகழும் நிகழ்வுகளாகும். இது அல்லாஹ்வின் விதியின் அடிப்படையில் ஏற்படுகிறது.
ஒருபக்கம் ஸபர் மாதம் பீடை என்று ஒதுக்கி தள்ளக்கூடியவர்கள் மற்றொரு பக்கம் ஸபர் மாத இறுதியில் செய்யக்கூடிய அனாச்சாரங்களை பற்றிப் பார்ப்போம்.

ஸபர் கழிவு அல்லது ஒடுக்கத்து புதன் என்றழைக்கப்படுகின்ற ஸபர் மாதத்தின் கடைசி புதன்கிழமை அன்று தமிழகத்தில் பரவலாக ஒரு சில அரபி வார்த்தைகளை மா இலைகளிலும் தட்டுகளிலும் மை கொண்டு எழுதி, அப்படி எழுதிய வாசகங்களை தண்ணீரில் கரைத்து குடித்து, வீடுகளில் தெளித்து, தலையில் தெளித்து குளித்தால் முஸீபத்துகள் நீங்கும் என்று செய்து வருகிறார்கள் (பொதுவாக நம்மில் யாருக்கேனும் காய்ச்சல், இருமல் வந்தால் மருத்துவரிடம் காண்பித்து நோய் எதிர்ப்பு மருந்து வாங்கி சாப்பிடுவோம் அல்லவா அதேபோல் ஸபர் மாத பீடையை தடுக்க நோய் எதிர்ப்பு மருந்துதான் மா இலையின் தண்ணீர்?) இப்படி செய்ய மார்க்கத்தில் ஆதாரம் உள்ளதா என்றால் கியாமத் நாள் வரையிலும் அவர்களால் ஆதாரங்களை கொண்டுவர முடியாது என்பதே உண்மை. (அந்த அரபி வார்த்தை என்னவென்று எழுதியவருக்கும் தெரியாது, குடிப்பவருக்கும் தெரியாது, காரணம் எழுதக்கூடியவர்களில் பெரும்பாலானோர் குர்ஆன் வசனங்களை படிக்க-கற்றுக்கொள்வதற்காக மதரஸா சென்ற அந்தந்த ஊர் சிறுவர் சிறுமிகளே என்பது குறிப்பிடத்தக்கது)

அடுத்ததாக ஸபர் மாத கடைசி புதனன்று வீடு முழுவதும் சுத்தம் செய்து (அன்றைய தினத்தில்தான் சுத்தம் செய்ய வேண்டுமா? எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியவர்கள் ஒடுக்கத்து புதனுக்காக மட்டும் சுத்தம் செய்வது மூடநம்பிக்கையையே), கறி-சோறு சமைத்து, அரிசி ரொட்டியும் சுட்டு (சமைத்து), ஆக சமைத்த சாப்பாட்டையும், ரொட்டியையும் வீட்டில் சாப்பிடுவார்களா என்றால் இல்லை மாறாக, ஆண்களும் பெண்களுமாக சேர்ந்து கடற்கரைக்கோ, ஆற்றாங்கரைக்கோ, புல்வெளிக்கோ, தர்ஹாக்களுக்கோ சென்று நீராடிவிட்டு அங்கேயே சாப்பிட்டு விட்டு வந்தால் முஸீபத்துகள் நீங்கும் என்பது இவர்களுக்கு இஸ்லாம் பற்றி அறியாமையினால் ஏற்பட்ட நம்பிக்கை. இந்த நம்பிக்கையோடு அன்றைய தினத்தில் இவர்களில் ஒரு சிலர் தொடரக்கூடிய பயணம் சினிமா தியேட்டர், பிறகுதான் வீடு இப்படி செய்யக்கூடிய இவர்களுக்கு முஸீபத்துகள் நீங்குமா அல்லது தொடருமா? நன்றாக சிந்திக்கவும். இவர்களில் அதிகமானோருக்கு அன்றைய தொழுகை இருக்காது.
இன்னும் ஒருசில பகுதிகளில் கணவன்-மனைவி குறிப்பிட்ட ஒடுக்கத்துபுதன் அன்று புல்வெளி பிரதேசம் சென்று சிறிது நேரத்திற்கு புல்வெளியில் காலை வைத்துவிட்டு நேராக செல்வதும் தியேட்டர்தான். இதுதான் இவர்களுக்கு முஸீபத்துகளை நீக்கும் முறை.

மேற்கண்ட நிகழ்ச்சிகள் தொடராக ஒவ்வொரு வருடமும் படுவிமர்சியாக உண்டுகளிக்கவும், கண்டுகளிக்கவும் மேற்கோள் இடுகின்ற சம்பவம் இதுதான் அதாவது, நபி (ஸல்) அவர்கள் ஸபர் மாதத்தில் நோய்வாய்ப் பட்டிருந்ததால் அந்த மாதம் பீடை மாதம் என்ற நம்பிக்கை தமிழக சில முஸ்லிம்களிடம் உள்ளது. மேலும் அந்த ஸபர் மாதத்தின் கடைசி புதன்கிழமை அன்றுதான் நபி (ஸல்) அவர்கள் குணமடைந்து நீராடினார்களாம், அதனால் நாமும் ஒடுக்கத்துபுதனில் குளித்து நமது முஸீபத்தை நீக்க வேண்டுமாம். இந்த சம்பவம் முழுக்க முழுக்க ஆதாரமற்றது.

எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ், மலக்குகள் மற்றும் மனிதர்களின் சாபம் உண்டாகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அலி (ரலி) ஆதாரம் : அபூதாவூத், நஸாயீ)

அறியாமை காலத்தவர்களின் அரபியர்கள் ஷவ்வால் மாதத்தை பீடை மாதமாக கருதி வந்தனர், அன்றைய அரபியர் ஷவ்வால் மாதத்தில் எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தாது தடுத்து வந்தனர், இந்த மூடநம்பிக்கையை தீயிலிட்டு கொளுத்தும் வகையில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், நான் ஷவ்வால் மாதத்தில்தான் திருமணம் முடிக்கப்பெற்றேன், ஷவ்வாலில்தான் என் இல்லற வாழ்க்கையை துவங்கினேன், நபி (ஸல்) அவர்களுக்கு என்னைவிட விருப்பமுள்ள மனைவியாக இருந்தது யார்? என்று கூறினார்கள.; (அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி), ஆதாராம் : முஸ்லிம், அஹ்